ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு தங்குதடையில்லாமல் காவிரி நதிநீரை வழங்கும் நோக்கில், ரூ.484 கோடி மதிப்பில் காவிரி குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டதாகவும், அந்தத் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் பணியை தானே மேற்கொண்டதாகவும் முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அடிப்படைத் தேவைகளில் ஒன்றான குடிநீர் வழங்குவதிலும் அரசியல் செய்கிறது கேடுகெட்ட திமுக அரசு.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்#மக்களைக்_காப்போம்#தமிழகத்தை_மீட்போம் pic.twitter.com/TOTb1EudKA
— AIADMK IT WING – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKITWINGOFL) October 10, 2025
“>
ஆனால், தற்போதைய திமுக அரசு அந்தத் திட்டம் ஏடிஎம்கே ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதற்காகவே, மக்களுக்கு தண்ணீர் வழங்கும் பணியை செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளதாக அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். “மக்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் வாட வைக்கும் ஆட்சி திமுக ஆட்சி , எனக் கூறிய அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, ஈரோடு அரசியல் வட்டாரங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
