IPL தொடரில் பெங்களூருவில் இன்று நடைபெறும் 70வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்டது. ஏற்கனவே குஜராத் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. இப்போட்டியில் பெங்களூரு அணியானது வெற்றி பெற்றால் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டது. மும்பை, ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மும்பை வென்றால் நேரடியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்று விடும். தோல்வியடையும் பட்சத்தில் பெங்களூரு அணிக்கு வாய்ப்பு கிடைக்கும் எனும் நிலை ஏற்பட்டது. இச்சூழலில் மழையின் காரணமாக பெங்களூரு-குஜாராத் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டாஸ் தாமதமாக போடப்பட்டது.

இதில் டாஸ் வென்ற குஜராத் அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்பின் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், விராட் கோலி 61 பந்துகளில் சதம் அடித்து 101 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் விளையாடினார். அதன்பின் பிளெஸிஸ் 28 ரன்களும், மைக்கேல் பிரேஸ்வெல் 26 ரன்களும், மேக்ஸ்வெல் 11 ரன்களும் லாம்ரார் ஒரு ரன்னும் அடித்தனர். அதேபோல் அனுஜ் ரவாட் 23 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இறுதியில் ஆட்டத்தின் முடிவில் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன்களை பெங்களூரு அணி எடுத்தது. பின் குஜராத் அணியானது 198 ரன்கள் அடித்தால் வெற்றி எனும் இலக்கோடு களம் இறங்கியது. இதில் அதிபட்சம் 52 பந்துகளில் சுப்மன் கில் சதமடித்து 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதனை தொடர்ந்து விஜய் சங்கர் அரை சதம் அடித்து 53 ரன்களும், விரிதிமான் சாகா 12 ரன்களும், டேவிட் மில்லர் 6 ரன்களும் எடுத்து குவித்தனர். இதனிடையே ராகுல் திவாதியா 4 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் விளையாடினார். இந்த ஆட்டத்தின் முடிவில் 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்ககளை எடுத்து குஜராத் அணியானது அபார வெற்றிப்பெற்றது. இதன் காரணமாக பெங்களூரு அணியானது பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய முடியாமல் வெறியேறியது. குஜராத் அணியின் வெற்றியின் வாயிலாக 16 புள்ளிகளுடன் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.