லண்டன் பி.பி.சி நிறுவனம் குஜராத் கலவரம் குறித்து “இந்தியா:தி மோடி கொஸ்டின்” எனும் தலைப்பில் இரண்டு பகுதிகள் கொண்ட ஆவணப்படம் தயாரித்துள்ளது. இதன் முதல் பகுதி கடந்த செவ்வாய்க்கிழமை ஒளிபரப்பாகியுள்ளது. அதில் குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடிக்கு நேரடி தொடர்பு இருப்பது இங்கிலாந்து அரசுக்கு தெரியும் என கூறப்பட்டுள்ளது. அதன் இரண்டாவது பகுதி 23ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் இந்தியா இந்த ஆவணப்படத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது பாகிஸ்தான் வம்சாவளி எம்.பி இம்ரான் உசைன் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். பி.பி.சி ஆவணப் படத்தில் கூறப்பட்ட தகவல்களில் உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா என அவர் கேட்டுள்ளார். அதற்கு பிரதமர் ரிஷி சுனக் பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அதாவது அவர் கூறிய போது, “எந்த நாட்டில் மக்கள் துன்புறுத்தப்பட்டாலும் நம் சகித்துக் கொள்ள மாட்டோம். ஆனால் அந்த ஜென்டில்மேன் பற்றி முன்வைக்கப்படும் அனைத்து கருத்துக்களிலும் எனக்கு உடன்பாடு இருப்பதாக கூறமுடியாது” என அவர் தெரிவித்துள்ளார்.