சமீபகாலமாக இளைஞர்கள் பலரும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் 12 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தை சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர் துஷ்யந்த் நேற்று அதிகாலை வீட்டில் மூச்சு விட முடியாமல் துடித்துள்ளார். உடனே பெற்றோர்கள் சிறுவனை மருத்துவமனையில் சேர்க்க போது ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவனின் மரணம் உடன்படிக்கும் மாணவர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.