தமிழகத்தில் முந்தைய ஆட்சியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சரியான திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, மழைநீர் தேங்குவது, போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்களுக்கான அடிப்படை வசதிகள் போன்ற விஷயங்கள் குறித்து சரியான திட்டமிடல் இல்லாமல் கடந்த ஆட்சி காலத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை கட்டமைத்துள்ளனர். புதிய மழை நீர் வடிகால் அமைப்பதற்கு 17 கோடி மதிப்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது எனவும் இந்த ஆண்டு இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.