கிரீஸ் நாட்டின் மன்னராக தனது 23-ஆம் வயதில் இரண்டாம் கான்ஸ்டெனினின் மன்னராக அரியணை ஏறினார். கிரீஸ் நாட்டில் மன்னராட்சி முறைக்கு 1967-ஆம் ஆண்டு எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் இரண்டாம் கான்ஸ்டெனினின் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதன் பின் 1974 -ஆம் ஆண்டு மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு மக்களாட்சி முறை வந்தது. அதனால் அவர் அதிகாரப்பூர்வமாக மன்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து மக்களாட்சி மலர்ந்த நிலையில் நாடு திரும்பியுள்ளார். இதற்கிடையே கிரீஸ் நாட்டின் கடைசி மன்னரான இரண்டாம் கான்ஸ்டெனினின் இன்று வயது முதிர்வு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். ஏதென்ஸில் உள்ள மருத்துவமனையில் உடல் நல குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த இவர் மரணம் அடைந்துள்ளதாக மருத்துவமனை ஊழியர்கள் கூறியுள்ளனர்.