ஹைதராபாத்தில் இருக்கும் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு போதைப்பொருள் கடத்தப்பட்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் சுங்க அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது சிங்கப்பூரில் இருந்து வந்த பயணி ஒருவரை சோதனை செய்தபோது அவர் தனது உடமைகளில் மறைத்து வைத்து 5.9 கிலோ ஹெராயின் போதைப் பொருளை கடத்தியது கண்டறியப்பட்டது. அந்தப் பயணியை கைது செய்து போதைப் பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதன் மதிப்பு 41.44 கோடி என்று தெரிவித்துள்ளனர்.