தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் நடிகை திரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் மேனன், அர்ஜுன், சஞ்சய்தத், மிஷ்கின், மன்சூர் அலிகான் மற்றும் சாண்டி மாஸ்டர் போன்ற பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த படம் அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்நிலையில் காஷ்மீரில் 15 நாட்கள் படப்பிடிப்பை நடத்துவதற்கு படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், நடிகை திரிஷா படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பியுள்ளார். பனி சூழ்ந்த பகுதியில் தான் கதைக்களம் அமையும் என்பதால் காஷ்மீரில் படப்பிடிப்பை எடுப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அங்கு அதிக பனிப்பொழிவு இருப்பதால் நடிகர் விஜய் உட்பட படகுழுவினருக்கு கடும் குளிர் காரணமாக உடல் நலம் சரியில்லாமல் போனதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இருப்பினும் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் நடிகை திரிஷா சென்னைக்கு திரும்பிய நிலையில் அவர் நன்றாக இருப்பதாக பணம் குழு தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.