இன்று காவலர் பயிற்சி மைய நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், காவல் நிலையத்துக்கு வருகின்ற ஒவ்வொரு பாதிக்கப்பட்ட நபரிடம் ஆறுதலாக பேசி, அவர்கள் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு காவல் துறைக்கும், சமூகத்துக்கும் இடையேயான உறவை வலுவாக்கவேண்டும்.

நேர்மையாக கடமையை செய்வது மூலம், மக்களுடைய நன்மதிப்பை பெறமுடியும். காவல் பயிற்சி முடித்து பணிக்குப் போகின்ற ஒவ்வொரு அதிகாரியும் மக்களுடைய நண்பர்களாகத் திகழ்ந்து காவல் துறைக்கும், அரசுக்கும் பெருமை சேர்க்கவேண்டும் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.