இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி 31,008 பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 17 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  தொடங்கி வைத்தார். இந்நிலையில், தெலங்கானா அரசு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அமல்படுத்துகிறது.

அதன்படி, 1-10 வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இத்திட்டத்தை வரும் அக்டோபர் 24ம் தேதி முதல் செயல்படுத்த அரசாணை வெளியீட்டுள்ளது. சமீபத்தில் அம்மாநில அதிகாரிகள் சென்னை வந்து இத்திட்டத்தை ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.