காலிஸ்தான் ஆதரவாளர்கள் அதிக அளவில் ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வசித்து வருகின்றனர். கடந்த மாதம் காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப் சிங் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து இந்தியாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட தொடங்கியது காலிஸ்தான் ஆதரவாளர்கள் கூட்டம்.

இந்நிலையில் இந்திய மாணவர் ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளார். 23 வயதான இந்திய மாணவர் ஆஸ்திரேலியாவின் மேரிலாண்ட் மாகாணம் சிட்னி நகரில் வசித்து வந்துள்ளார். இவரை நேற்று நான்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் இரும்பு கம்பியால் தாக்கி விட்டு காலிஸ்தான் வாழ்க என்ற கோஷத்தையும் எழுப்பி உள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.