
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் பகுதியில் இளம்பெண்(20) ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்(22) ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பழக்கம் காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது.
இதனை அறிந்த இருவீட்டாரும் இருவரையும் கண்டித்துள்ளனர். இதனால் அவர்கள் பயந்து போய் நம்மளை பிரித்து விடுவார்கள் என்று எண்ணி நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறினர். பிறகு அன்று இரவு திருப்பத்தூர் அருகில் உள்ள ஒரு கோயிலில் தங்கி உள்ளனர். அதன்பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து பெற்றோர்கள் தங்களை தேடுவதை அறிந்த அந்த இளம் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த இளம் ஜோடியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் திரண்டனர். அதன் பின் பெண்ணின் பெற்றோர் தனது மகளிடம் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் எதுவும் பேசவில்லை. ஒரு கட்டத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுது காலில் விழுந்து கெஞ்சியுள்ளார்.
ஆனாலும் அந்தப் பெண் தன் காதலனின் கையை இறுக்கமாக பிடித்து கொண்டார். இந்த பாச போராட்டம் அங்கிருந்தவர்களின் கல் நெஞ்சை கரையச் செய்தது. மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.