மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வருகிறார்கள். புனிதஸ்தலமான சீரடி சாயிபாபா கோயில் வரும் மே 1ம் தேதியிலிருந்து காலவரையற்று மூடப்பட இருப்பதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோயிலுக்கு பாதுகாப்பு கொடுக்கும் பொறுப்பை CISFயிடம் கொடுக்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசின் இந்த முடிவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த கோயில் நிர்வாகம் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் வரை கோயில் அடைக்கப்படும் என அறிவித்துள்ளது.