இன்னும் சில தினங்களில் புத்தாண்டு பிறக்க இருக்கிறது. மக்கள் இந்த புதிய தொடக்கத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள் . புதிய வருடத்தில் வருமானம் அதிகரித்து செலவுகள் குறைய வேண்டும் என்று தான் வேண்டுவார்கள். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக பல அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. பெட்ரோல், டீசல், சிலிண்டர், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் கவலையில் உள்ள நிலையில் புத்தாண்டிலும் விலைவாசி உயர்வால் சாமானியர்களுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதன்படி பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுடைய கார்களின் விலையை உயர்த்த முடிவு செய்திருக்கிறது. Tata மோட்டார்ஸ், ஹூண்டாய், மாருதி சுசுகி போன்ற கார் நிறுவனங்கள் தங்களுடைய கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளனர். இந்த புதிய விலையானது 2024 ஜனவரி மாதம் நமக்கு தெரிய வரும் என்று தெரிவித்துள்ளனர்.