இந்த வருடம் புத்தாண்டில் கார் வாங்க நினைத்தவர்களுக்கு பெரிய அதிர்ச்சி தகவல் ஒன்று காத்திருக்கிறது. அதாவது ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஒவ்வொன்றாக தங்களுடைய கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னதாக தான் டாட்டா மோட்டார்ஸ், மாருதி சுசுகி போன்ற நிறுவனங்கள் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. தற்போது ஜப்பான் நாட்டின் கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டாவும் அதனுடைய அனைத்து மாடல்களின் விலையையும் புத்தாண்டு முதலில் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

அதாவது ஜனவரி 1 2024 வருட முதல் இந்தியாவில் அனைத்து பயணிகள் வாகனங்களின் விலையையும் உயர்த்துவதாக ஹோண்டா கார் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. உற்பத்தி செலவு அதிகமாக இருப்பதன் காரணமாக இந்த விலை உயர்வு குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.