கார்த்திகை தீபத்திருநாள் இன்று கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு திருவண்ணாமலையில் கடந்த 17ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து தீப தரிசன நாளான இன்று காலை 4 மணிக்கு கோவில் முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில் மாலை 6 மணிக்கு 2668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். அங்கு தீபம் ஏற்றப்படவும் தமிழக முழுவதும் அனைவரின் இல்லங்களிலும் தீபம் ஏற்றி வழிபாடு நடக்கும்.