இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடி புதிய சேவைகளை வழங்கி வருகிறது. இந்த சேவைகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது டெபிட் கார்டு இல்லாமலே ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வசதியை எஸ்பிஐ வங்கி வழங்கி வருகிறது. உங்கள் மொபைல் போன் யோனோ அப்ளிகேஷனில் யோனோ கேஷ் ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். அதில் எவ்வளவு பணம் தேவை என்பதை உள்ளிடுங்கள். அது உங்கள் மொபைல் மெசேஜ்க்கு ஒரு ஆறு இலக்க நம்பரை அனுப்பவும். அந்த நம்பரை ஏடிஎம் மையத்தில் உள்ளீடு செய்தால் மட்டும் போதும் உங்களுக்கான பணம் கைக்கு வந்து விடும்.