
குஜராத்தின் சூரத் நகரில் காய்கறிகள் திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண் மற்றும் அவரது மகள் நடுத்தெருவில் பயங்கரமாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நகரின் புகழ்பெற்ற வேளாண் உற்பத்தி சந்தையான APMC மார்க்கெட்டில் கடந்த வியாழக்கிழமை நடந்துள்ளது. தாயும் மகளும் கூச்சலிடும் நிலையில் அவர்களை சாலையோரமாக இழுத்து போட்டு அடித்த காட்சிகள் காணொளியில் பதிவாகியுள்ளன.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் கோபத்தையும், பெண்களின் பாதுகாப்பற்ற நிலையை மீண்டும் முன்வைத்துள்ளது. அந்தக் காணொளியில் பாதுகாப்பு காவலராக இருக்கக் கூடிய நபர் ஒருவர் பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து சாலையில் இழுத்துச் செல்லும் காட்சியும், மற்ற இரு நபர்கள் அந்த பெண்ணின் மகளை முடியை பிடித்து தரையில் தள்ளி, கையால் அடித்து கல் வீசி ஆனதாக்குகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக, சூரத் நகர போலீசார் நடவடிக்கை எடுத்து, இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கு தொடர்ந்தும் விசாரணையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வர நிலையில் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
गुजरात के सूरत का यह वीडियो मानवता को शर्मसार करने वाला है..!
एक नादान बच्ची और उसकी मां घर पर खाना बनाने के लिए थोक सब्जी मंडी से सब्जियाँ बटोर रही थीं।
मां-बेटी से सब्जी छीन ली गई और फिर घसीट-घसीट कर दोनों को पिटा गया। सुरक्षा कर्मी पीट रहे थे और व्यापारी पिटवा रहे थे।… pic.twitter.com/JRIEiQJjOu
— Shaikh Javed (@ShaikhSahab__) April 10, 2025