தமிழகத்தில் நடைபெறும் ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தும் கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் பேசினார்.
அதில், “தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் காதல் திருமணங்களை நடத்திக்கொள்ளலாம். சாதி மறுப்பு திருமணத்திற்கு அரசு தளம் அமைக்காத நிலையில், நாங்கள் காதலர்களுக்காக நம் அலுவலகங்களை திறந்து வைக்க தயாராக இருக்கிறோம்” என உறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, இதற்கு பதிலளித்தார். அதில், “பாஜகவினருக்கு ஆணவக் கொலைகள் மீது கடும் கோபம் உள்ளது. கடுமையான சட்டங்களை கொண்டு வந்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.
