நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 10 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது பாமக.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. பாஜக கூட்டணியில் சேர்ந்துள்ள பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாமக வேட்பாளர் பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 10 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாட்டாளி மக்கள் கட்சி. 10 தொகுதிகளில் காஞ்சிபுரம் தவிர்த்து 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருந்தது பாமக.

அதன்படி அரக்கோணம் – பாலு, கடலூர் – தங்கர் பச்சான், திண்டுக்கல் – திலகபாமா, ஆரணி – கணேஷ் குமார், மயிலாடுதுறை- ம.க. ஸ்டாலின், கள்ளக்குறிச்சி – தேவதாஸ், தர்மபுரி – சௌமியா அன்புமணி, சேலம் – அண்ணாதுரை, விழுப்புரம் – முரளி சங்கர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் காஞ்சிபுரம் தொகுதி வேட்பாளர் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரம் தனித் தொகுதியில் பாமக சார்பில் ஜோதி வெங்கடேசன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 10 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது பாமக. இதனிடையே தர்மபுரி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட பாமக வேட்பாளர் அரசாங்கம் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பாமக வேட்பாளராக சௌமியா அன்புமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.