2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளை காங்கிரஸ் கட்சியை தீவிரமாக மேற்கொண்டு வந்தது. தற்போது இந்த பணிகள் முடிந்துள்ள நிலையில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. தேர்தல் அறிக்கையை மல்லிகார்ஜுன கார்கே, சோனியா மற்றும் ராகுல் ஆகியோர் இணைந்து வெளியிடுகின்றனர்.