காங்கிரசிலிருந்து விலகிய விஜயதாரணியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி நேற்று பாஜகவில் இணைந்தார். டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைத்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் விஜயதரணி. அண்மைக்காலமாக தமிழ்நாடு காங்கிரஸ் மீது விஜயதரணி அதிருப்தியில் இருந்த நிலையில், பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் சார்பில் 3வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் விஜயதரணி, கடந்த இரண்டு வாரங்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த  நிலையில் இன்று பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்ததால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருந்தார் விஜயதரணி..

இந்நிலையில் காங்கிரசிலிருந்து விலகிய விஜயதாரணியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விளவங்கோடு எம்எல்ஏ விஜயதரணியின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்டேன். எம்எல்ஏ பதவியில் இருந்து விலகுவதாக விஜயதரணி நேற்றே கடிதம் அனுப்பி இருந்தார். ராஜினாமா ஏற்கப்பட்டதால் விளவங்கோடு தொகுதி காலியென விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. விளவங்கோடு தொகுதி காலி என அறிவிக்கப்பட்ட பின் 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.