மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக தலைமையிலான கூட்டணி ஏற்கெனவே தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டது. ஆனால், அதிமுக நிலை என்னவென்று தெரியாமல் தொண்டர்கள் குழம்பி வருகின்றனர்.

புதிய தமிழகம் போன்ற சிறு கட்சிகள் அதிமுகவில் இணைந்துள்ள நிலையில், தேமுதிக இணையுமா என்ற சந்தேகம் நிலவுகிறது. பாமகவும் கடைசி நேரத்தில் அதிமுகவை கழட்டிவிட்டுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக தனித்து விடப்பட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.