வாரிசு அரசியலை எதிர்த்து மிகப்பெரிய கலகம் செய்து, பல எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய தலைவர்களுடன் திமுகவில் இருந்து பிரிந்து மதிமுக என்ற கட்சியை தொடங்கியவர் தான் வைகோ. ஆனால், காலச் சுழற்சியில் சிக்கிய அவர், கடந்த தேர்தலில் சொந்த சின்னத்தில் கூட நிற்கமுடியாமல் போனது.

மீண்டும் அவரே வாரிசு அரசியலை கையிலெடுத்து, தற்போது மகனுக்கு திருச்சி தொகுதியை விடப்பிடியாக கேட்டு பெற்றிருக்கிறார். கட்சியில் எத்தனையோ சீனியர்கள் இருக்கும்போது தன் மகனுக்கு மட்டும் வைகோ சீட் கொடுத்துள்ளார் என உட்கட்சிலேயே புலம்புகின்றனர்.