
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் அழகன். இவரது மகள் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியில் கூலி வேலை பார்க்கும் சந்துரு என்பவரும் கல்லூரி மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த அழகன் சந்துருவை எச்சரித்துள்ளார். இதில் கோபமடைந்த சந்துரு அழகனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் படுகாயமடைந்த அழகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் சந்துருவை தீவிரமாக தேடி வருகின்றனர்.