தென்காசி மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் விதமாக பேச்சு,கட்டுரை மற்றும் கவிதை உள்ளிட்ட போட்டிகள் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ள நிலையில் இந்த போட்டிகளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும் பங்கேற்கலாம். இந்த போட்டிக்கு இரண்டு மாணவர்கள் வீதம் ஒரு கல்லூரியில் இருந்து ஆறு மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் இந்த போட்டி நடைபெற உள்ளதாகவும் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்களின் கல்லூரி முதல்வரின் பரிந்துரையுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக பத்தாயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 7000 ரூபாயும், மூன்றாம் பரிசாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.