தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர் வைபவ். இவர் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் வைபவ் எழுதிய தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது.

அதில் அவர் தனது தம்பியை கண்டிப்பாக தான் படிக்கும் கல்லூரியில் சேர்க்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது தற்கொலைக்கு கல்லூரி மதிப்பெண் அதிகம் எடுக்க வலியுறுத்தி அழுத்தம் கொடுத்தது தான் காரணம் என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.