இயக்குனர், நடிகர்கே, எழுத்தாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர் பாக்கியராஜ். இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் போன்ற படங்களில் தன்னுடைய திரைப்படக் கலையை கற்றுக் கொண்டார். எண்பதுகளில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பூர்ணிமாவும் மலையாள சினிமாவில் நடிக்க ஆரம்பித்து அதன் பிறகு தமிழ், ஹிந்தி என பல மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வந்தார்.

இந்த நிலையில் பயணங்கள் முடிவதில்லை படத்திற்கு பிறகு மலையாள படத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார் பூர்ணிமா. அந்த வேலையில் மலையாள படம் ஒன்றுக்காக பாரிஸ் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கு செல்வதற்காக தன்னுடைய அம்மாவிடம் ஒரு சில நாட்கள் தங்கி செல்லலாம் என்றும் மும்பை வந்துள்ளார். அப்பொழுதுதான் பாக்யராஜ் அங்கு ஷூட்டிங்கில் வந்திருப்பதாக பூர்ணிமாவுக்கு தெரியவந்துள்ளது. முன்பு பாக்யராஜுடன் அவருக்கு பழக்கம் இருந்தால் உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்ன சார் எங்க ஊருக்கு வந்திருக்கீங்க வீட்டுக்கு சாப்பிட வாங்க என்று கூறியிருக்கிறார்.

அடுத்த நாள் பாக்யராஜ் வீட்டிற்கு வந்துள்ளார் . அன்றைய தினம் நவராத்திரி என்பதால் வீட்டில் பழங்கள் மட்டுமே இருந்துள்ளது. அதை சாப்பிட்டுக்கொண்டே இருவரும் பேசிக்கொண்டே இருந்துள்ளனர். பின் பாரிஸ் போயிட்டு வந்தது எனக்கு கால் பண்ணுங்க என்று கூறி பாக்யராஜ் அங்கிருந்து சென்றிருக்கிறார். பாரிஸ் சென்று வந்த பூர்ணிமாவிடம்  கல்யாணம் செய்து கொள்ளலாமா? என்று கேட்டுள்ளார் பாக்யராஜ். அதற்கு பூர்ணிமா அப்பாவிடம் கேளுங்கள் என்று கூற வீட்டில் எல்லோரும் சம்மதம் கூறி விட்டார்கள் . அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையை தொடங்கி உள்ளார்கள்.