கர்நாடகா மாநிலத்தில் வாக்குப்பதிவு நேரம் முடிவதற்கு முன்னதாகவே அதற்குரிய இயந்திரங்களை எடுத்து சென்றதாக நினைத்து கிராம மக்கள் ஆத்திரமடைந்தனர். ஆனால் கூடுதல் தேவைக்காக வைக்கப்பட்டு இருந்த வாக்குப் பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் எடுத்து சென்ற நிலையில் பொதுமக்கள் ரகளை செய்துள்ளனர்.

மேலும் வாக்குப்பதிவு செய்யப்படாத கூடுதல் இயந்திரங்களை உடைத்து தேர்தல் அதிகாரிகளின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. விஜயபுரா மாவட்டம் பசவன்பாகேவாடி தாலுகாவிலுள்ள மசபினாலா கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அதுமட்டுமின்றி வாக்குப்பதிவு பாதியில் நிறுத்தப்பட்டதாக கூறி வரிசையில் காத்திருந்த கிராம மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.