கம்ப்யூட்டர் விசைப்பலகையில் புதிதாக ஒரு அம்சத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் இணைக்க உள்ளது. அதன்படி ஏஐ அல்லது ஏஐ கீயை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. மைக்ரோசாப்டின் விண்டோஸ் 11 சிஸ்டத்தில் இயங்கும் பயனர்கள் இப்பொழுது ஏஐ கருவிலான கோபிலெட்டை(copilet) அணுகலாம். அதன்படி தகவல்களை தேடவும் மின்னஞ்சல்களை எழுதவும் மற்றும் படங்களை உருவாக்கவும் கோபிலட்டை பயன்படுத்த முடியும்.

இந்த நிலையில் இந்த புதிய விசைப்பலகைகள் வரும் பிப்ரவரி மாதம் முதல் தயாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல மைக்ரோசாஃப்ட் நிறுவனமானது அடுத்த வாரம் லாஸ் வெகாஸில் நடைபெற உள்ள சிஇஎஸ் தொழில்நுட்ப நிகழ்வில் சில தயாரிப்புகளை காட்சிப்படுத்த உள்ளது.