புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இளம்பாவயல் கிராம பகுதியில் பழனி குமார் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அந்த பகுதியில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்தது. நேற்று பழனி குமார் தனது குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் பக்கவாட்டு சுவர் இடிந்து விழ ஆரம்பித்தது.

உடனே சுதாரித்துக் கொண்டு பழனி குமார் தனது மனைவி குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார். சிறிது நேரத்தில் அனைத்து சுவர்களும் இடிந்து தரைமட்டமானது. தற்போது கூலி வேலை பார்க்கும் பழனி குமார் உறவினர்கள் வீட்டில் வசித்து வருகிறார். போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.