கன்னி ராசி அன்பர்களே….

இன்று மதிப்பும் மரியாதையும் குறையும்படியான காரியங்களில் ஈடுபடுவதை நீங்கள் தவிர்க்க வேண்டும். அவர்கள் சொல்கிறார்கள் இவர்கள் சொல்கிறார்கள் என்று எந்த ஒரு பணியிலும் நீங்கள் ஈடுபடுவதற்கு முன்பு யோசித்து ஈடுபட வேண்டும். வேண்டாத வேலைகளை நீங்கள் செய்ய வேண்டாம். விபத்து ஏற்படாமல் இருக்க பயணத்தின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது பொறுமையாக செல்ல வேண்டும்.

மாலை நேரத்தில் கொஞ்சம் நடை பயிற்சி உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். கண்டிப்பாக உங்கள் உள்ளமும் உடலும் உற்சாகமாக இருக்கும். மனதை அமைதிப்படுத்துவதற்கான பயிற்சியில் தன்னை தயார் படுத்திக் கொள்ளுங்கள். தியானம் போன்ற விஷயங்களில் ஈடுபடுவது நல்லது. வேலை நிமித்தமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். வழக்குகளில் சாதகமான சூழல் நிலவும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மறைமுக எதிர்ப்புகள் விலகும். கௌரவம் அதிகரிக்கும். மறைமுக நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. உடலை வலுப்படுத்த வேண்டும். கவனமாக எதிலும் இருக்க பாருங்கள். புளிப்பு சம்பந்தப்பட்ட உணவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். அது மட்டும் இல்லை பித்தம் போன்றவை அதிகரிக்கும். தயவு செய்து பித்தம் ஏற்படுத்தாத உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் சூட்டை தணித்து விட்டாலே உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

தலைவலி போன்ற பிரச்சனைகள் அவ்வப்போது வரக்கூடும். அதனையும் சரி செய்து கொள்ள வேண்டும். தொடர்ந்து வியாபாரத்தில் இருந்த போட்டிகள் கண்டிப்பாக நீங்கும். பழைய பாக்கிகள் சீராக வசூல் ஆகும். பணப் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு கட்டி விடுவீர்கள். கேட்ட இடத்தில் பண உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறைந்து விடும். முயற்சிகள் கால தாமதமாகத்தான் பலன் கொடுக்கும். இதைப்பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். புத்தி கூர்மையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.

பெண்கள் இன்று ஆழ்ந்த உறக்கத்தில் காணப்படுவீர்கள். ஓரளவு ஓய்வாக காணப்படுவீர்கள். பெண்கள் இன்று ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். காதலை பொருத்தவரை பிரச்சனை இல்லை சாதிக்க முடியும். காதல் வெற்றி நோக்கி செல்லும். பயப்பட வேண்டாம். காதலுக்காக நேரத்தையும் வீணடிக்க வேண்டாம். இன்று மாணவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். புன்முறுவலுடன் நடந்து கொள்வீர்கள்.

விளையாட்டு துறையிலும் சாதிக்க முடியும். கல்வி துறையிலும் சாதிக்க முடியும். கண்டிப்பாக கல்வியில் கொஞ்சம் நேரம் ஒதுக்கிக் கொண்டு பாடங்களை படிப்பது நல்லது. முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதேபோன்று காலையில் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட்டு எந்த காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்: 2, 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை