தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் அமைச்சர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாநகராட்சி உயர் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் களத்தில் மக்களுக்கு துணை நின்று பணியாற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என மக்கள் யாரும் பதற வேண்டாம், எந்த ஒரு சூழலிலும் உங்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.