தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை உள்ள மாவட்டங்களில் மருத்துவத்துறை எச்சரிக்கையுடன் இருக்க பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மின் தட்டுப்பாட்டை தவிர்க்க ஜெனரேட்டர் மற்றும் பேட்டரி ஆகியவை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் 24 மணி நேரமும் அவசரக்கால மருத்துவ குழு தயார் நிலையில் இருக்கும் படியும் கூறப்பட்டுள்ளது. அதோடு புயலுக்கு பிறகு தொற்றுநோய் ஏற்படுவதை தடுக்க பரிசோதனைகள் மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.