கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, திருச்சி, சேலம், தர்மபுரி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓர் இடங்களில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.