MNM கட்சியின் சிறப்பு பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரம்யா வேணுகோபால் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்வீட்டில் நீண்ட நெடுங் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில், ‘ஊழல் நபர்களால் கட்சி பாதிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் கமல்ஹாசனைத் தவிர மற்ற யாரும் தலைவர்கள் போல செயல்படவில்லை. கனத்த இதயத்துடன் MNM கட்சியில் இருந்து விடைபெறுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்