
குஜராத் மருத்துவமனை ஒன்றில் கடந்த 10ஆம் தேதி 29 பேருக்கு கண் புரை அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. சிகிச்சைக்கு பிறகு அதில் 17 பேருக்கு பார்வையிழப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அம்மாநில உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்தது. சம்பவம் தொடர்பாக வரும் பிப். 7ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.