இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்லப் பிராணிகள் மற்றும் விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு இணையத்தில் வைரலாகி வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பொதுவாகவே விலங்குகள் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இருக்காது. தற்போது கரடியின் வித்தியாசமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஒரு கரடி அடர்ந்த காட்டில் சுற்றி தெரிகிறது. அங்கு ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு வரும் கரடிக்கு திடீரென கண்ணாடியில் தனது முகம் தெரிகிறது. தன்னை கண்ணாடியில் பார்த்த கரடி பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி அச்ச பட்டதா இல்லை கோவை பட்டதா, விளையாடியதாய் என சரியாக புரியவில்லை என்றாலும் அதற்கு தான் கண்ணாடியில் பார்த்த விஷயம் பிடிக்கவில்லை என்று தெரிகிறது. கண்ணாடியில் தன்னை பார்த்த கரடி அதனை வேறொரு விலங்கு என்று தவறாக நினைத்து அதன் மீது விழுந்து கண்ணாடியை தாக்கி பல விஷயங்களை செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.