பிரபல தொகுப்பாளராக சின்னத்திரையில் வலம் வரும் அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், அதில் அதிகம் ட்ரோல்களை தான் சந்தித்தார். இதையடுத்து அவர் நடத்தி வரும் யூடியூப் சேனலில் மகளுடன் சேர்ந்து வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். இவரின் கணவரான வினீத் தற்போது இந்தியக் கடற்படையில் பணிபுரிந்து வருகிறார். சென்ற ஒரு மாதத்துக்கு முன் அர்ச்சனா-வினீத் 2 பேரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்ததாக அதிர்ச்சியான தகவல் வெளியானது. இதுகுறித்து அர்ச்சனாவே ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

அதாவது “இருவரும் வெவ்வேறு துறையில் உள்ளதால் பிரச்சனை வந்தது. ஒரு மாதத்திற்கு முன் பிரிய முடிவெடுத்து விட்டோம். எனினும் 15 நாட்களுக்கு முன்பு கணவர் வினீத்துக்கு திடீரென்று விசாகபட்டினத்திற்கு ட்ரான்ஸ்பர் போட்டுவிட்டார்கள். என்னுடைய மகள் ஸாரா எங்கள் இருவரிடமும் பேசினாள். ஒருவரை விட்டு ஒருவர் வாழ முடியுமா என யோசித்துக்கொள்ளுங்கள் என கூறினாள். 20 ஆண்டுகளுக்கு முன் எப்படி சந்தித்து காதலித்தோமோ அதைபோல தான் கடந்த 15 நாட்களாக இருந்து வருகிறோம்” என அர்ச்சனா கூறியிருக்கிறார்.