குழந்தைகளுடன் ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டையை சேர்ந்த வெண்ணிலா என்பவருக்கு தனது கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அவர் தார்னிகா (7) ஜெனிஸ்ரீ (5) ஆகிய தனது இரண்டு மகள்களுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.