சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தேசிய உழவர் உழைப்பாளர் கழக நிறுவன தலைவர் ஜோதிகுமார் தனது கட்சியை கலைத்துவிட்டு மாவட்ட பொறுப்பாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்து கொண்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தேசிய உழவர் உழைப்பாளர் கழகம் தமிழக மற்றும் புதுச்சேரியில் 6 தொகுதிகளிலும் டிபன் கேரியர் சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.