ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தோல்விக்கு பொறுப்பேற்ற அதிமுகவிலிருந்து ராஜினாமா செய்யக்கோரி எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சேலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அவரை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதிமுகவின் தொடர் தோல்விக்கு காரணமான எடப்பாடி பழனிச்சாமியே கட்சியை விட்டு வெளியேறு.

அதிமுக தொண்டர்களை மதிக்காத எடப்பாடி பழனிசாமியே கட்சியை விட்டு வெளியேறு. எம்ஜிஆர் ஜெயலலிதா வளர்த்த இயக்கத்தை அழித்துக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியே கட்சியை விட்டு வெளியேறு உள்ளிட்ட வாசகங்கள் அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. இது அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.