ஜப்பான் நாட்டின் சப்பரோ தீவில் உள்ள நியூ சித்தோஸ் விமானநிலையத்தில்  இருந்து தென்கொரியாவின் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது. அப்போது ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் கேத்தே பசிபிக் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்துடன் மோதி உள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஆனால் தென்கொரியவுக்கு சொந்தமான விமானத்தின் முன்பக்க இறக்கை சேதமடைந்துள்ளது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் மாற்று விமானம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். கடுமையான பனிமூட்டம் தான் இந்த விபத்திற்கு காரணம் என்றும் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.