
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அனு பிரசாத் என்பவர் கடந்த 2007-ஆம் ஆண்டு 2.57 லட்ச ரூபாய் கல்வி கடன் பெற்றார். உரிய காலத்தில் அந்த பணத்தை செலுத்த முடியாமல் நீதிமன்றம் மூலம் ஒரே தவணையில் அந்த பணத்தை கட்டி முடித்தார். ஆனாலும் தனியார் ஏஜென்சி மூலம் வாங்கிய கடனுக்கு 7 லட்சம் கட்ட வேண்டும் என கூறியதால் அனு பிரசாத் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் கல்வி கடனை வசூல் செய்த பிறகும் ஏஜென்சி மூலம் மிரட்டல் விடுத்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி குரு பிரசாத்திற்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.