கடக ராசி அன்பர்களே,

இன்று மிகவும் நேர்மையுடன் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். எதிலும் அவசரம் வேண்டாம் சிலரிடம் பார்த்து பக்குவமாக பழக வேண்டும் .மகிழ்ச்சியான நாள் பிள்ளைகள் மீது அளவற்ற பாசம் காட்டுவீர்கள். இன்று பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்க்க பாருங்கள். தேவையற்ற கருத்து வேறுபாடுகளால் பிரிந்து செல்லும் சூழல் உள்ளது கவனமாக இருங்கள்.

இன்று எதிர்பார்த்த .பண உதவிகள்  கிடைக்கும் .திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது இறைவன் அருளால் எல்லாம் சாத்தியம். ஆனால் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் .தேவையற்ற விஷயங்களில் ஈடுபட வேண்டாம். கருத்துக்களை பரிமாறும் போது கவனமாக இருங்கள். சட்டென்று சொல்லும் வார்த்தைகளால் கோபம் ஏற்படலாம்.

பெண்கள் இன்று யாருக்கும் பொன் பொருள் போன்றவற்றை கடனாக கொடுக்க வேண்டாம். இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்பாக செயல்படுங்கள். கல்வி மீது அக்கறை கொள்ளுங்கள். உயர்கல்வி மீது ஆர்வம் அதிகரிக்கும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள் .நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  வடக்கு

அதிஷ்ட எண்  :  மூன்று மற்றும் ஏழு

அதிர்ஷ்ட நிறம்   : வெள்ளை மற்றும் நீல நிறம்