கடகம் ராசி அன்பர்களே,

இன்று எதிலும் தீர்க்கமாக யோசித்து நல்ல முடிவுகளை எடுக்கக்கூடிய நாளாக இருக்கும். துயரங்கள் தீருவதற்கு இறைவழிபாட்டினை மேற்கொள்வது நல்லது. காலையில் நல்ல செய்தி வரும். சில பணிகள் தாமதமாக முடியும். பயம் வேண்டாம். நினைத்த வேலை ஒன்று நடக்காமல் போகலாம். விடுமுறை நாளை அற்புதமாக கொண்டாடுவீர்கள். மகிழ்ச்சியுடன் இருக்க பாருங்கள். குடும்பத்துடன் சேர்ந்து எதையும் செய்ய பாருங்கள்.

தொழில் நிமித்தமாக இரவு நேர பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். தொழில் கூட்டாளிகளிடம் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. பணவரவு அதிகரிக்கும். காரிய தடைகள் விலகும். செல்வம் சேரும் நாளாக அமையும். வாழ்க்கைத் தரம் உயர எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். பெண்களுக்கு இன்று யோகமான நாளாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆசைகள் கனவுகள் பூர்த்தியாகும். மனோ தைரியம் ஏற்படும்.

இன்று மாணவர்கள் முழு முயற்சியால் முன்னேற்றம் காணலாம். கல்விக்காக நேரம் ஒதுக்குவது நல்லது. பெரியவர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். யோசித்து எந்த செயலிலும் ஈடுபடுவது நல்லது. இந்த இனிய காணும் பொங்கல் தினத்தில் செல்வம் பெருகட்டும் மகிழ்ச்சி அதிகரிக்கட்டும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 2, 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்