தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் யசோதா படத்திற்கு பிறகு தற்போது சாகுந்தலம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து விஜய் தேவர கொண்டாவுடன் இணைந்து குஷி மற்றும் சிட்டாடல் என்ற ஹிந்தி வெப்தொடர் போன்றவைகளிலும் சமந்தா பிசியாக நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

அந்த வகையில் சாகுந்தலம் படத்தில் இருந்து நடிகை சமந்தா சில புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த வகையில் இன்று மகா சிவராத்திரியை  முன்னிட்டு சாகுந்தலம் படத்திலிருந்து ஒரு புகைப்படத்தை சமந்தா தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு ஓம் நமசிவாய. சிவபெருமானின் அருள் வாழ்நாள் முழுவதும் இருக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் சமந்தா பகிர்ந்துள்ள புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)