மூதாட்டி ஒருவர் தபால் ஓட்டு போட்டுவிட்டு சிறிது நேரத்திலே உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. கர்நாடகாவில் ஏப்ரல் 26, மே 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்னர் யசோதா (83) என்ற மூதாட்டி அதிகாரிகள் முன் தபால் ஓட்டு போட்டார். பின் சிறிது நேரத்திலே மயங்கி விழுந்து உயிரிழந்தார். மரணிக்கும் தருவாயிலும் அவர் ஜனநாயகக் கடமையாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது