சமூக வலைத்தளங்களில் வைரலாக வேண்டும் என்ற மோகத்தால் இளைஞர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் நவபாரத் தளம் வெளியிட்ட செய்தியின்படி, ஓடும் ரயிலின் வாசலில் நின்றுகொண்டு ஆபத்தான முறையில் சாகசம் செய்த இளைஞர் ஒருவர், எதிர்பாராத விதமாக பிடிதவறி கீழே விழுந்துள்ளார்.
இந்தக் கோரச் சம்பவத்தின் வீடியோவைப் பார்க்கும் எவரும் அச்சத்தில் உறைந்து போகும் வகையில் உள்ளது. ஒரு சில ‘லைக்’குகளுக்காகவும், புகழுக்காகவும் இளைஞர்கள் இத்தகைய விபரீத செயல்களில் ஈடுபடுவது அவர்களின் வாழ்வையே கேள்விக்குறியாக்கி விடுகிறது.
View this post on Instagram
“>
இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே துறையினர் எவ்வளவோ எச்சரிக்கைகள் விடுத்தும், அபராதங்கள் விதித்தும் இது போன்ற விதிமீறல்கள் தொடர்வது கவலையளிக்கிறது. சாகசம் என்ற பெயரில் செய்யப்படும்.
இத்தகைய முட்டாள்தனமான செயல்கள் உயிரிழப்பிலோ அல்லது வாழ்நாள் முழுவதும் தீராத உடல் ஊனத்திலோதான் முடிகின்றன. இளைஞர்கள் சமூக வலைத்தளப் புகழைத் தேடுவதை விட்டுவிட்டு, தங்கள் பாதுகாப்பிற்கும் குடும்பத்தின் எதிர்காலத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
