திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வித்யாலயம் அருகே பாரதி நகர் பகுதியில் ராஜ்மதி என்ற 25 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் திருப்பூரில் தங்கி ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜ்மதிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் மாப்பிள்ளை வீட்டாரும் பெண் பார்க்க அடிக்கடி வந்தனர்.

ஒவ்வொரு முறையும் மாப்பிள்ளை வீட்டார் வரும்போது தன்னை அலங்கரித்து ராஜ்மதி அழகாக காட்சியளித்தார். இருப்பினும் மாப்பிள்ளை வீட்டார் பதில் சொல்லவில்லை. பலமுறை மாப்பிள்ளை பார்த்து சென்றும் ஒருத்தருக்கு கூட அந்த பெண்ணை பிடிக்கவில்லை. தன் வயது பெண்கள் கணவன் குழந்தைகள் என மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்த அவருக்கு திருமணம் ஆகாத ஏக்கம் அதிகரித்தது.

இதனால் மன வேதனையில் இருந்து அந்த இளம் பெண் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது